Wednesday, August 24, 2005

கவிதைகள்

என் நண்பர் ஒருவர் மிகப் பெரிய கவிஞர் (??? ) . அடிக்கடி கவிதைகள் எழுதி எல்லோருக்கும் அனுப்புவார்.


அதில் சில


தினமும் நீந்துங்கள்
உடல் பருமன் குறையும்
என்றார் மருத்துவர்.
பார்த்ததே இல்லை
போலும் அவர்
திமிங்கலங்களை .!!!


Nike ஷ¥ அணிந்து
Reebok சட்டை மாட்டி
Rayban கண்ணாடி அணிந்து
Swiss மலை அடிவாரத்தில்
Bikini போட்ட மங்கையர் சூழ
சினிமா ஹீரோ பாடினார்
இந்தியனாய் இரு.!!!


ஒரே மாதிரி உடை
ஒரே மாதிரி தலை தொப்பி
2000 மாணவர்கள்
பட்டமளிப்பு விழாவில்
பேசினார் தலைவர்.
தனித்துவமே உனது வெற்றி !!!


கொலம்பஸ்க்கு நன்றி
நீங்கள் மட்டும் இல்லாவிட்டால்
Ohio வின் தலைநகருக்கு
என்ன பெயர் வைப்பது ?


எனது ரம்மியான பொழுதுகளை
ஒரு சீட்டுக்கட்டில்
புதைத்து வைத்திருக்கிறேன்.
அவளின் நினைவுகள்
சரக்காய்
சிவப்பான பனித்துளியாய்
உருண்டு திரண்டு
மதுக்கோப்பையின் நுனியில் !!

===========
கவிஞர் பவுர்ணமி பாண்டியன்.

4 comments:

said...

சின்னவன் கவிதைகள் சுவையாக உள்ளன, நம்ம கிட்ட கூட கவிஞர் கோந்துவாயன் என்று ஒருவர் இருக்கின்றார், அவர் எழுதிய ஆயா செஞ்ச பாயா இங்கே

said...

குழலி
கோந்து வாயன் , பவுர்ணமி பாண்டியணுக்கு குருவாய் இருப்பார் போல இருக்கே?

அந்த கவிதைக்கு மூலம் எது ?

said...

நன்றி நிஷா..
என்ன ரொம்ப நாளாய் காணோம் இந்த பக்கம் ..

said...

எனது "ரம்மி"யான பொழுதுகளை
ஒரு சீட்டுக்கட்டில்
புதைத்து வைத்திருக்கிறேன்.
அவளின் நினைவுகள் சரக்காய்
சிவப்பான பனித்துளியாய்
உருண்டு திரண்டு
மதுக்கோப்பையின் நுனியில்.


=======

குடிப்போதையில் பவுர்ணமி பாண்டியன்..