Friday, August 19, 2005

குழலியே கோபமா ?

என்ன கோபமா இருக்கியா?” என்று கேட்டேன் குழலியிடம்

“ம்ம், நீ?”

“எனக்குக் கோபம் இல்லை”

“எனக்கும் கோபம் கன்னாபின்னான்னு இருக்கு” என்றது குழலி. “நெறயா உம் மேல. கொஞ்சம் எம் மேலயும். ஜெண்டில்மேனாய் இரு என்று மீசைக்கார KT குஞ்சுமோன் ஒரு வார்த்தைல சொல்லிட்டுப் போய்ட்டார். ஆனா என்ன பண்றதுன்னு தெரியலே!”


“சரி. விடு. அங்க என்ன பின்னூட்டம் விட்ட ?"

“விடா? நான்தான் பின்னூட்டத்தை அழிச்சிட்டேனே ”

“ஆமா. அதுக்காக என்ன பண்றது? நீ அழிச்சதை திரும்பவும் ஒரு முறை சொல்லிட்டா தீர்ந்து போயிடும் பிரச்சினை தான் . நான் உனக்கு முன்னாடியே சொன்னேன். ஏன் இப்படி அறிவாளியா இருக்கேன்னு?”


“சொன்னே. இல்லைன்னு சொல்லல்லே. ஆனா நான் நல்லதனமா இருக்கணும்னு நெனச்சேன், அதனால அழிச்சேன் "



“என்னைப் பாத்து நெதானமாச் சொல்லு. நல்லவனா மாறும் இந்த முடிவு
திடீர் மாற்றம் இல்லையே”


“நீ சொல்றது சரிதான். இருந்தாலும் எல்லாம் சரியாகிடும்னு ஒரு நப்பாசை. அதான் இப்போ எல்லா நாரதர்கள் மூலம் மோசமான வலி"

"எவ்வளவு நம்பிக்கையான ஆளு நீ, இப்படி பின்னூட்டம் இட்டு அழிக்கலாமா சொல்லு ? எவ்வளவு பின்னூட்டங்கள் இப்ப அதனால? "


"உனக்கு தனியாய் மயில் அனுப்பறேன். அத பத்தி. எல்லாம் சரியாயிடும்"



நிமிர்ந்து பார்த்து மெல்லச் குழலியிடம் சொன்னேன், “ஒரு முறை கடலூருக்கு போய்ட்டு வாயேன் !”



=====================
செல்வராஜூக்கு நன்றி.

14 comments:

said...

:))

said...

குழலிக்கு என்ன கோபம் ?

said...

// ஒரு முறை கடலூருக்கு போய்ட்டு வாயேன் ! // கடலூரா ஏர்வாடியா

said...

// என்ன கோபமா இருக்கியா?” என்று கேட்டேன் குழலியிடம்

“ம்ம், நீ?” //

குழலிங்கறது ஆரு? உங்க கேர்ள் ப்ரண்டா...

said...

// நான் நல்லதனமா இருக்கணும்னு நெனச்சேன் // குழலியால் நல்லதனமாக மாற முடிந்ததா... வெள்ளித்திரையில் காண்க

said...

முகமூடி
அந்த கட்டுரையை படிச்சி ( காப்பி அடிச்சி ) எழுதியதுங்க இது

இந்த மாதிரி கேள்வி எல்லாம் கேட்க கூடாது,

said...

மக்கா ஒரு பின்னூட்டம் விட்டு பின் அதை அழித்ததை வைத்து கூட பதிவு எழுத முடியுமா? அய்யா சின்னவனே எங்கேயோ போய்ட்டிங்கய்யா.

//கடலூரா ஏர்வாடியா //
எலே முகமூடி ஏர்வாடியில உன் தொல்லை தாங்க முடியாமதான் எல்லோரும் ஊரைவிட்டு ஓடிட்டாங்களாமே...

said...

ஆக, குழலியை ராமபக்தர் என்று சொல்லுகிறீர்கள்!

ஜெய் ஆஞ்சனேய!

said...

காப்பாற்றுவாயே திருவெங்கடேசா.... காப்பாற்றுவாயே திருவெங்கடேசா!

said...

வெளையாடுறீங்கப்பா !! :-) :-)

said...

நன்றி செல்வராஜ்.
:)

said...

//ஆக, குழலியை ராமபக்தர் என்று சொல்லுகிறீர்கள்

ஹி ஹி ஹி !!

said...

சூப்பர் மச்சி , சூப்பர்

said...

// ஜெண்டில்மேனாய் இரு என்று மீசைக்கார KT குஞ்சுமோன்

அந்த மீசைக்காரரோட இந்த மீசைக்காரரா ?
;)