Friday, October 24, 2008

சினிமா, எனக்கு எனிமா !

யாருய்யா இந்த விளையாட்ட ஆரம்பிச்சது ?
சுகுராய் ஒன்னு , இரெண்டு கேள்வி கேட்டமா, அடுத்த வேளையா பார்ப்போமா என்பதை விட்டு. அனுமான் வாலு கணக்கா இவ்வளோ கேள்விங்க. நானே இந்த பதிவின் கடவுச்சொல்ல மற்ந்து போயிருத்த நேரத்தில், கொத்ஸ், கொத்தி விட்டுராரு. உங்க விதி. படித்து தொலைங்க..


1 .எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
அ) நான் பிறந்த்தே ஒரு தியேட்டரில்தான், நினைத்து - ஏன் ஹீரோவும், ஹீரோயினும் கிட்ட வரும் போது ரோஜாப்பூ காட்டறாங்கனுத்தான்.
ஆ) என்னுடைய பதினெட்டாவது வயதில், சக்கரக்கட்டி. நினைத்தது, சாந்தனுவுக்கு அவனுடைய அக்கா நல்லாவே இருக்கிறார்ன்னு.
இ)மூன்றாம் பிறை. சுப்பரமணிய வீட்டுக் கூட்டி போலாமேன்னு நினைச்சேன்.


2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
அ ) மணாளனே மங்கையின் பாக்கியம்.
ஆ) தசாவதாரம்
இ) புது வசந்தம் ( ஒரு உலகப் கோப்பை கால் பந்துப் போட்டியில் அர்ஜெண்டினா , கேமரூனிடம் அடிவாங்கிய தினத்தில் பார்த்தது )


3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

அ) தசாவதாரம் . கேமராபிரிண்ட் சரியா இல்லயேன்னு உணர்ந்தேன்.
ஆ) மைக்கேல் மதன காமராஜன் - ரூபிணி இப்ப எங்கே இருக்காருன்னு யோசித்தேன்.
இ) சபாபதி - இந்த படமெல்லாம் கூட யூடியுபில் இருக்கான்னு



4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
அ) இராஜாதி இராஜா - டிக்கெட் வாங்க போன இடத்தில் கூட்டதில் அடி வாங்கிய சம்பவம் மிகவும் தாக்கியது
ஆ) இராமராஜனின் அனைத்து படங்களும்
இ) ஆடி வெள்ளி ..


5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
அ) சினிமாவுக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இருக்கா என்ன ?
ஆ) தமிழ் சின்மாக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டிய கட்டாயம்
இ) பாபிலோனா, காங்கிரஸில்/பிஜேபியில் சேரமுடியாமல் இன்னும் தவிப்பது


5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
அ) ஜகன் மோகினியில் பேய் அடுப்பில் கால் வைப்பது .
ஆ) ஆடிவெள்ளி.
இ) PC சிரிராமின் கேமரா ஜாலங்கள்


6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா
அ) ஆம், கிஸ் கிஸ்னா ரொம்ப பிடிக்கும்
ஆ) இல்லை.

7.தமிழ்ச்சினிமா இசை?
அ) 80களின் இரசிகன். புதுப் பட பாடல்கள் நிச்சயம் கேட்பதில்லை/பிடிப்பதில்லை.
ஆ) ஆங்கிலப் பாடல்கள் மட்டுமே
இ) ஆங்கிலத்தில் இருந்து உருவப்பட்ட தமிழ் பாடல்கள் மட்டுமே


8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
அ) தமிழ் தவிர வேற எதுவும் புரிவதில்லை. பாதி தமிழ் படங்க்ளே இப்ப புரிவதில்லை
ஆ) நாம் பார்க்கிற படங்களுக்கு மொழியே தேவையில்லை ( ஹி ஹி )


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
அ) அருமை நண்பன் இப்ப ஒரு பெரிய பாடலாசிரியன். அவனுக்கு அப்ப அப்ப, பாடல் வரிகள் எழுதிக் கொடுப்பதுண்டு
ஆ) குழந்தை நட்சதிரமாய் சில/பல படங்களில் வாலை காட்டி இருக்கிறேன்
இ) நான் எது செய்தாலும் உருப்பட்டதாய் சரித்திரம் இல்லை. தமிழ் சினிமாவாவது பிழைத்துப் போகட்டும்.


10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அ) ஒளிமயமாக இருக்கும்
ஆ) ஒலிமயமாக இருக்கும்
இ) வருங்கால முதல்வர் கோழம், பஞ்ச் டயலாக் இருக்கும் வரை உருப்படப் போவதில்லை.


11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?


அ) தமிழனுக்கு தீபாவளிக்கு நமீதா என்ன பிராண்ட் சீக்காய் போட்டு குளிக்கிறார் என்றுத் தெரியாமல் பைத்தியம் பிடிக்கக் கூடும்.
ஆ) எனக்கு ஒன்றும் ஆகாது. நான் பார்க்கும் படங்களுத்தான் மொழியே தேவையில்லையே
இ)இந்த மாதிரி தொடர் சினிமா கேள்விகள் நிற்கும்.நானும் எழுதாம தப்பித்துக் கொள்வேன்

Tuesday, December 04, 2007

கொத்தனாரின் கொலைவெறி

கொத்ஸின் நூறாவது பதிவாம், பட்டி மன்றமாம் !

வெயிலடித்துக் கொண்டே
மழை பொழிவது போல்
தெண்டுல்கர் 99 இல் அவுட் ஆகி
இந்தியா ஜெயிப்பதுப் போல்
இன்பம் துன்பம் இரண்டும்
இழையோடும் தருணம் இது.

தமிழை இணையத்தில் முன்னெடுத்துச்
செல்ல வேண்டிய
கொத்ஸ் பல நேரங்களில்
நகராமலும், நகரமுடியாமலும்
சில நேரங்களில் பின்னோக்கியும் செல்வது ஏன் ?

சரியான கேள்வி,
சாட்சிகள் கிடைக்காத வேள்வி !!

கோமாவில் கிடப்பவனுக்கு
தேதி எதுக்கு ?
உனக்கும் மட்டும் ஏன் இந்த கேள்வி ?

என் சுயநலத்தில் பொது நலமும் சார்ந்து இருக்கிறது !


யுத்தங்களும் , சத்தங்களும்,
ரத்தங்களுக்கும் மத்தியில்
என் நெடுங்கனவு நீண்டு கொண்டே இருக்கிறது!!

என்ன கனவு அது ?
எப்பொருள் பற்றியது ?


பின்னூடமே வராத கொத்ஸின்
பதிவு எப்போது வரும் ?

பூமியோடு நான் மட்டும்
சுற்றிக் கொண்டே இருக்கிறேன்.
என் நிறைவேறாத
கனவை நெஞ்சில் சுமந்துக் கொண்டே !!!


பெளர்ணமி பாண்டியன்.

Thursday, May 03, 2007

ஹாலிவுட்டில் சிவாஜி ! அசோக் அமிர்தராஜ் தயாரிப்பு

ஹாலிவுட்டில் சிவாஜி. அசோக் அமிர்தராஜ் தயாரிப்பு

பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளாரான அசோக் அமிர்தராஜ் தன்னுடைய ஹைட் பார்க் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் விரைவில் வெளிவர இருக்கும் சிவாஜி படத்தை ஆங்கிலத்தில் எடுக்கப் போவதாக நேற்று இரவு இலாஸ் ஏஞ்சலிஸ் நகரத்தில் நடந்த பத்திரிக்கையாளர்கள் கூட்டத்தில் பலத்த கைத்தட்டல்களுக்கு இடையில் அறிவித்தார். இவர் ஏற்கனவே சிவாஜி பட இயக்குனரான ஷங்கரை வைத்து ஜீன்ஸ் என்ற படத்தை தயாரித்தது நீங்கள் அறிந்ததே. இந்த படத்துக்கும் ரஹ்மானே இசை அமைப்பார் என்றும் அவர் அறிவித்தார்.

சூப்பர்ஸ்டார் பாபாவை சந்திக்க இமயமலை போய்விட்டார் என்று சற்றுமுன் வலைப்பதிவை பார்த்தும் தாம் தெரிந்துக் கொண்டதால் இப்படத்தில் கதாநாயகனாக டாம்க்ரூஸ் அல்லது டாம் ஹான்க்ஸ் நடிக்க கூடும் என்றார் அவர். கதாநாயகியாக ஜெஸிக்க ஆல்பாவை தேர்ந்து செய்து இருப்பதாகவும், விவேகின் கதாபாத்திரத்துக்கு எட்டி மர்ப்பியே சரியான ஆள் என்றும் அவர் தெரிவித்தார்.
Fun Fun உன் லவ் Fun
Eddie murphy போல naughty

என்ற வரிகள் ஏற்கனவே சிவாஜி படப்பாடலில் இருப்பதையும் அவர் நினைவுப்படுத்தினார்.


படத்துக்கு பழம் பெரும் ஹாலிவுட் கதாநாயகன் மார்லன் பிராண்டோ நினைவாக மார்லன் என்றும் பெயர் சூட்டவும் திட்டமிட்டு இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Female Chorus:
Is he moon is he sun
Is he the choosen one
Come come geeta and reeta
He is the roaring cheetah !!

Male Chorus :
Antartica, africa, australia,bostwana,
When he comes back we all get nirvana

Hero :
How can I ever forget
running behind that brunette !
street fights strip club
eating that veggie sandwich sub !


படத்தின் கதா நாயகன் அறிமுகப்ப பாடலாக இது இருக்ககூடும் என்று அதிகாரப் பூர்வமற்ற நமது செய்தியாளர் பெளவுர்ணமி பாண்டியன் தெரிவிக்கிறார்.

படத்தின் வெற்றிக்கு எமது வாழ்த்து(க்கள்) !!





Thursday, February 08, 2007

அன்னா!!! கண்ணீர் அஞ்சலி !!!




துக்கம் தொண்டையடிக்கிறது. !!




you will be missed !


Wednesday, February 07, 2007

1000மாவது கவிதை. வைரமுத்து வாழ்த்து !

கவிஞர் பெளர்ணமி பாண்டியன் இதுவரை 999 கவி(வ)தைகள் எழுதி தள்ளியிருக்கிறார். வரலாற்று சிறப்பு மிக்க இந்த 1000வது கவிதை வரைவை முன்னிட்டு கவிப்பேரரசு வைரமுத்து தனிமடலில் எழுதி அனுப்பிய வாழ்த்துரை உங்களின் பார்வைக்கு,

அன்புள்ள பாண்டியா,
இதுவரை உனக்கு நான்
எந்தக்கடிதமும் எழுதியதில்லை.

கடிதம் என்பது
தூரங்களின் காகித வடிவம்.

உனக்கும் எனக்கும் தூரமில்லை.

உன் காதுகள் என்
செல்பேசி தொடும்
தூரத்தில்தான் இருக்கிறது.

என்ன செய்வது.
போன்பில் கட்ட முடியவில்லை
அதனால்தான்

நினைவுக் கொசுக்களால்
நித்திரைதொலைந்த
கரண்ட் கட்டான இந்த காரிரவில்
உன்க்கு இந்த கடிதம் !


பொதுவாக கவிதைகள்
உணர்ச்சியின் பெளன்ஸர்களாய்
இருப்பதுண்டே தவிர
உண்மையின் குட்லெந்த் டெலிவரிகளாய்
இருப்பதில்லை !

உணர்ச்சியின் உறுமல்களுக்கும்
கீழே உண்மையும் கொஞ்சம்
உறைந்திருக்க வேண்டும்.
அதுதான் கவிதை.

உன் கவிதைகள்
அழகானாவை! ஆழமானவை !
அதனால் ஆபத்தானவை !

மீசையோடு நடிக்கும்
மாதவன் போல
கோவை சரளாவோடு சோடி சேர்ந்த
கமல்போல கவனம் ஈர்ப்பவை.

காதலின் எடை என்ன
என்பதை மில்லிகிராம் சுத்தமாய்ச்
சொல்லிவிட முடியாது
ஆனால் உன் கவிதையின் தரத்தை
அனுஅனுவாக அள்ளமுடியும்.


ஒரு டன் கடல்தண்ணீர்
0.000004கிராம் தங்கம் வைத்திருக்கிறது.
உன் கவிதைகள் முழுவதும் தங்கத்தால்
உரச்ப்பட்டு இருக்கின்றன.

பூக்களுக்குச் சுளுக்கெடுப்பதுபோல்
உன் கவிதைகள் நாக்குக்கு
சுளுக்கெடுக்கின்றன !



பயன்படுத்தாத வானம்
பயன்படுத்தாத சூரியன்
பயன்படுத்தாத நட்சத்திரம்
பயன்படுத்தாத பூமி போல்
உன் பயன்படுத்தாத முளை
மனிதகுலத்துக்குப் பாக்கியிருக்கிறது.


உன் கங்காரு மடியை
விட்டுவெளியே வா.
உன் வெல்வெட் திரைவிட்டு
வெளியே வா.
நீ உன் தங்கக்கூடு தகர்.
சிறகு விரித்து வா
.சிலிர்த்து வா.
உன் ஆயிரமாவது
கவிதையோடு பறந்து வா ! பாடி வா !!

உன் வானத்தில் சூரியன்
அஸதமிக்ககாமல் இருக்கட்டும் !

Tuesday, January 16, 2007

இந்த கதையாவது குமுதத்தில் ....

இந்த கதையாவது குமுதத்தில் ....

விமானம் ஏறி கலைச்செல்வியும் ,கிரிஷும் சியாட்டல் வந்து சேர்ந்தாகிவிட்டது. அலுவலகத்தின் அருகிலேயே நல்ல அபார்ட்மெண்டில் தனிக்குடித்ததனமும் ஆரம்பித்து விட்டார்கள்.
ஜனவரி மாத சியாட்டல். வெளியில் மைனஸில் குளிர் தாக்கி கொண்டு இருந்த ஒரு ஞாயிறு காலை.

"கலை, கொஞ்சம் டவல் எடுத்து தரியாடீ!! "
( அவங்க எல்லாரையும் டீ போட்டுத்தான் கூப்பிடுவாங்களாமே ) பாத்ரூமில் இருந்து குரல் கொடுத்தான் கிரிஷ்.


"டவல் கூட எடுத்துபோகத் தெரியாதா உங்களுக்கு. காலையில் டிபன் வேலையை கவனிப்பதா, இல்லை உங்களுக்கு எடுபிடி வேலை செய்வதா"
திட்டிக் கொண்டே டவலோடு வந்தாள் கலை. ( கவனிச்சிங்களா. புருஷனை திட்டறா, இந்த அடங்காபிடாறி !! )

டவலை நீட்டியவளை கட்டி அணைத்தான் கிரிஷ்.

"ஏண்டி செல்லம் கோவிச்சுகிற. இன்னைக்கு ஞாயிறுதானே. காலையிலே ஆரம்பிச்சிடலாமா " கண்ணடித்தான்.

"இராத்திரியில்தான் அது இல்லாம உங்களுக்குத் தூக்கம் வராது, இன்னைக்கு காலங் காத்தேலேயேவா" . சிணுங்கினாள்.

"ஆமாம்டி . நாளையில் இருந்து வேலைக்கு போகணும்., இன்னைக்கு விட்டா அப்ப்புறம் பகலில் சான்ஸ் கிடைக்காது."

"அப்ப என்னை கல்யாணம் செய்றதுக்கு முன்ன , என்ன செய்வீங்க."

"அப்ப எல்லாம் தன் கையே தனக்கு உதவின்னு இருந்துட்டேன். இப்பத்தான் கட்டின பொண்டாடி நீ இருக்கியே. சீக்கிரம் டிரஸ் மாத்திட்டு பெட்ரூமுக்கு வந்துடு."

தலையை துவட்டிக்கிட்டே ரூமுக்குள் நுழைந்தான்.

"இந்த மனுஷனனுக்கு விவஸ்தையே இல்லை."
என்றவாறே உடை மாற்றி விட்டு அறைக்குள் வந்தாள் கலை.

"என்ன ரெடியா !!"

" ம்.ம் ரெடி. முதல்ல பெட்ல படுங்க." என்றாள் கலை.

"இராத்திரியில் தான், இந்த குளிருக்கு மூக்கு அடைத்துகிட்டு விக்ஸ் தைலம் தேய்க்காமல் தூங்க முடியறது இல்லை உங்களால். இப்ப பகலில் தூங்கவும் நாந்தான் விக்ஸ் தேய்ச்சு விடனும்ன்னு அடம் பிடிச்சா எப்படி."
என்றாவறே, நெற்றியிலும், மூக்கிலும் விக்ஸ் தடவ ஆரம்பித்தாள் கலை.

இந்த கதை குமுதத்தில் வருமா ??

=================================================================================

கலை கிரிஷ் மற்ற கதைகள் படிக்க ...

கதை 1

கதை 2

கதை 3

கதை 4

Friday, January 12, 2007

Best of 2007!

எல்லாரும் Best of 2006 போட்டு தாக்கிவிட்டார்கள். 2007 வந்து இரண்டு வாரம் ஆகிவிட்டது. வலைப்பூ உலகில் முதன் முறையாக Best of 2007 ( so far !)


Person of the Year 2007 .

உலகின் மிக அதிர்ஷ்டசாலியான சிறுவன். பெயர் தெரியாது. ஆனால் இந்த படம் மட்டும் போதும் , இனி இவன் என்ன சாதனை செய்தாலும், Jessica Alba உடன்
நீச்சலடித்த பையன் என்ற பட்டம் மட்டுமே மிச்சம் !





மிகச் சிறந்த பாடல்

நோரா ஜோன்ஸின் Wake Me up, புதிய ஆல்பம் Not too late !!
. பாடலை இங்கு கேடகலாம். . பாடலை இங்கு கேட்கலாம்.


மிகப் பெரிய விளையாட்டு வீரர்

வேற யாரு பெக்காம்தான். $250 மில்லியனாம். வாரத்துக்கு ஒரு மில்லியன். வாழ்க லாஸ் ஏஞ்சலிஸ்


நூறாண்டு விழா கொண்டாடும் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு.
இது பொம்பளைங்க சமாச்சாரம். நூறு வருஷம் ஆயிடுச்சாமாம். In Loving Mammarry !!!



மிகச் சிறந்த திரைப்படம்.
Blades of Glory.
Will Ferral இருக்கார். இதை விட வேறென்ன வேண்டும். மிகச் சிறந்தப் படமாக இதை தேர்ந்து எடுக்க.