Thursday, September 29, 2005

அலிபாபாவும் 40 கேள்விகளும்

அலிபாபா என்றவுடன் 40 திருடர்களும், கேள்விகள் என்றவுடன் வேதாளத்தையும் stereotype யாய் மனதிற்குள் கருத்தாக்கம் செய்துக் கொண்டு, பருப்பு என்றால் பம்மாத்தா, வயகராவில் வந்த bloodpath போன்ற புரட்சி கருத்துக்களை தன்னுள் ஏற்காமல், ஒரு குறுகிய வட்டத்துள் அடக்கிக் கொண்டு, கதவை மூடிக்கொள்ளும் இந்த சமூகத்தை சிலுக்குவார்ப்பட்டி, சிகாகோ, சின்ன கவுண்டர்புரம் சாவிகள் கொண்டும் திறக்கமுடியாத போதும், புராணத்தில் புரையோடிக் கிடக்கும் புனிதப்பசுக்களிடம் புளித்தப்பாலை கறந்துக் கொண்டு இருக்கிறோம் நாம்.


புல்லாங்குழலி 40 கேள்விகளும், எலக்கடைக்காரரும், முகமிலியும் லாங்காய் லிஸ்ட் போட்டு கேட்க்கும் போது, நாம் மட்டும் கேள்விகள் கேட்காது இருப்பது நமது கருத்து சுதந்த்திரத்தின் மென்னியை முறிப்பது போல ஆகும். எனவே இதோ கேள்விகள்

1. கறுப்பாய் இருப்பவள் கண்ணகியா மாதவியா ?

2.கறுப்பா வெளுப்பா மைக்கேல் ஜாக்ஸன் ?

3. கறுப்பு காக்கா, கறுப்பு குயில் எதுக்கு மவுசு ஜாஸ்தி ?

4. கறுப்பு என்றவுடன் உங்கள் மனத்தில் வரும் கலர் எது ?

இஸ்டாப் இஸ்டாப்.. என்னது மத்தவங்க எழுதறது கற்பை பற்றியா, கறுப்பை பற்றி இல்லையா ?
அப்ப கேட்ட நினைத்த 40 கேள்விகளும் வேஸ்டா ? சரி சரி, வேற 40 கேள்விகளோடு மீண்டும் வரேன்.


அதுவரைக்கும் இந்த பாட்டை கேளுங்க..

கறுப்புதான் எனக்கு பிடிச்ச கலரு
கற்பை போட்டுத் தாக்கும் பதிவு பலரு !

(பாட்டுக்குக் லிங்க கொடுக்க எந்த ப்ரோவும் கொப்பிரைட் வாங்கி விடவில்லை தானே ?? )

Wednesday, September 28, 2005

பாயும் புலியும் No செக்ஸ¤ம்

பாயும் புலி, பதுங்கும் நாகம் பார்த்தியா என்று நண்பர்(ன்) ஒருவர்(ன்) கேட்டார் கொஞ்ச நாட்களுக்கு முன்.

இது என்னடா தெலுங்கு டப்பிங்க் படமா என்று கேட்ட போது, இல்லை இது சீனப்படம், இதுக்குத்தான் AR ரஹ்மான் இசை அமைத்து இருக்கிறார் என்று போட்டுத் தாக்கினான்

அப்புறம் தான் அவன் Crouching Tiger Hidden Dragons பற்றி பேசுகிறான் என்றும், AR ரஹ்மான் இசை அமைத்தது வேற படம் என்றும் புரிய வைக்க முடிந்தது.

Wo hu cang long இதுதான் இந்த படத்தின் சீன தலைப்பாம். சரி எதுக்கு அது எல்லாம் என்கிறீர்களா ?


Ziyi Zhang படம் காட்டத்தான் .










அப்புறம் ஏன் தலைப்பில் செக்ஸ் என்று கேட்பவர்களுக்கு..

Go. figure it yourself ;-) !!

Monday, September 26, 2005

அடுத்த பிரச்சினை

தங்கர் , குஷ்பு பிரச்சனைகளுக்கு அடுத்து, தமிழகத்தில் அடுத்த பிரச்சனை ஆரம்பித்து இருக்கிறது.

பிரபல கவர்ச்சி நடிகை குலுக்காதேவி இன்று "India Day after Tomorrow " ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில்

"ஆண்கள் எல்லாம் அழுக்கானவர்கள். வியர்வை நாற்றம் உடையவர்கள். தனி மனித சுகாதாரம் இல்லாதவர்கள். '

என்று கூறியிருக்கிறார். இதனால் தமிழகத்தில் வேற வேலை இல்லாத மக்கள் கடும் கோபம் கொண்டு இருக்கிறார்கள். இது தமிழ் ஆண்களை இழிவு படுத்தும் செயல் என்ற கண்டணம் எழுந்து உள்ளது.

எதிர்ப்பு அதிகம் ஆவதை உணர்ந்த குலுக்கல் தேவி அவசரமாய் பாத்ரூமிற்குள் ஓடி ஓளிந்து கொண்டார். கடந்த இரண்டு நாட்களாய் அவர் வெளியில் வரவில்லை.

அனைத்து ஆண்கள் முன்னேற்ற கழக தொண்டர்கள் அவர் வீட்டு வாசலில் சோப்பு, டவல் போன்றவற்றை வீசி எதிர்ப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.


இதை பற்றி பிரபல வலைபதிவர்களிடம் எமது தினமூடி நிரூபர் கருத்து கேட்ட போது .

பதிவர் 1:

:எனக்கென்ன ஒரு வருத்தம் குலுக்காவிடம் என்றால் அதென்ன ஆண்கள் மட்டும் என வரையறை ?வியர்வை வாராத பெண்களே இல்லையா, இல்லை சிறுவர்களிடம் வியர்வையே வருவதில்லையா ? என்ன இருந்தாலும் குலுக்கா ஒரு புரச்சி புரோக்கிராமர் சீ சீ புரட்சி பெண்தான்.

பதிவர் 2:
குலுக்கா தோசை, குலுக்கா பேண்ட் எல்லாம் கொண்டாடிய தமிழ் மக்களுக்கு எவ்வளவு தேவையான கருத்துக்கள். குலுக்கா என்ன தினமும் குளிக்கிறாரா?
அவர் சுவிஸ் சூட்டிங் போன போது என்ன நடந்தது என்று தெரியாதா ?. 4 நாட்கள் குளிக்காமல் கும்மாளம் போட்டவர்தானே அவர்.

ஏற்கனவே குளிக்காமல் தேமல் வந்துக் கொண்டு இருக்கும் தமிழ் இளைஞர்களின் மனதில் ஏன் இன்னும் விஷத்தை ஊற்ற வேண்டும்?.


பதிவர் 3:
இராமயாணக் காலத்திலேயே இராமரும் இலக்குவனும், காட்டில் இருந்த போதும், இராவணனுடன் சண்டை இட்ட போதும் தினமும் குளித்ததாக கம்பர் எழுதி இருக்கிறார்.
என்னே ஆண்களுக்கான குளியல் கட்டுப்பாடு ?
.மனம் அழுக்காய் இருக்கலாம் ஆனால் உடல் அழுக்காய் இருக்கக் கூடாது என்பதே பண்பாடு. எவ்வளவு போலிகள் நாம்.

சனி நீராடு *
எந்த சனிக்கிழமை என்பதை நாமே முடிவு செய்வோம் !

பதிவர் 4::
குளியல் என்பது வேறு. ஆனால் தண்ணீர் தட்டுப்பாடு என்பது வேறு.
குலுக்கா தேவி சொன்னது யதார்த்தம் .அந்த தைரியத்தைப் பாராட்ட வேண்டும். உண்மையை வெளியில் பேச தைரியம் வேண்டுமல்லவா?

இவரைப் பற்றி எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தண்ணீர் தராமல் இழுத்தடிக்கும் கன்னடக்காரனை தட்டிக் கேட்கட்டுமே பார்க்கலாம். அதற்கு தைரியம் இருக்கிறதா ?

பதிவர் 5:
குலுக்கா தேவி உண்மையில் என்ன சொன்னார் ?
விளையாடி விட்டு அல்லது gym ல் உடற்பயிற்சி செய்து விட்டு வரும் ஆண்கள் வியர்வை நாற்றத்துடன் இருக்கிறார்கள். அவர்கள் உடனே குளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மிகவும் அழுக்குடன், வியர்வை நாற்றதுடன் இருப்பார்கள். என்பதே !

நான் குலுக்கா தேவி இடத்தில் இருந்தாலும் இதையே சொல்லி இருப்பேன். இதில் என்னத் தவறு இருக்கிறது ?


பதிவர் 6:
வியர்வையில் நனைந்தபடி
ஒரு ஆண் பஸ்ஸில் ஏறத்தொடங்கையில்
மட்டும்மூடிக் கொள்ளத் தொடங்குகின்றீர்கள்
அவசர அவசரமாக
உங்கள் மூக்குகளை !

உங்களது மூக்குகள்
எதையாவது மெல்ல முகந்தப்படி
வியர்வையில் நனைந்தபடி எவனவது ஏறுகையில்
உங்கள் கைக்குட்டைக்குள் ஓளிந்த
அவன்களுக்குப் நாற்றமடித்த போதும்
சனநெரிசலில் மூடிய மூக்குகளை
மறைக்காமல் சுவாசிக்க தொடங்குங்கள்
இப்போதே. !!!

----------------------------------------------------------------------
பாதுகாப்பு காரணம் கருதி பதிவர்களின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. யார் அவர்கள் என்று உங்களுக்குத் தெரியாதா என்ன ?

குஷ்பூ, ஸ்வீட், .யிர் ..

எல்லாரும் குஷ்பூ பதிவு போடறாங்க, ஏன் நீ இன்னமும் போடவில்லை என்று மயிலும், தொலைபேசியிலும், நேரில் ஆட்டோவிலும் வந்து "அன்பாய்" கேட்ட என் நண்பர்களுக்காக....

One picture is worth thousand words
அப்படின்னு , குப்பதுல பத்தாங் கிளாஸ் படிச்ச ஒரு பெரிசின் பேச்சுக்கு இணங்க..


குஷ்பூ



ஸ்வீட்



தயிர்

Friday, September 23, 2005

சில நேரங்களில்

நேர்நேர் தேமா நிரைநேர் புளிமா
என் மர மண்டைக்கு இது புரியுமா
கத்துக் கொடுத்த வாத்தியாரின் பெண் சுட்டி
ஒரு வெள்ளைக்காரனை கல்யாணம் கட்டி
இப்ப கான்வெண்டில் படிக்குது அவளின் குட்டி


குசும்பன் குழலி வீஎம் முகமூடி
படிக்கிறேன் அனைத்தும் தினமும் வாய்மூடி
பெரியவங்க போடறாங்க படம் வாத்து
புரியாத பின்னூட்டங்கள் அதில் பாத்து
பாட்டு லிங்கை கிளிக்கினால் வெறும் காத்து



பவுர்ணமி பாண்டியன்

==================
வீரப்பனின் முதலாமாண்டு நினைவுக்கு இந்த கவிதைகள் அர்ப்பணம் !!!

Thursday, September 22, 2005

என் தனித்தமிழ் பதிவு

இன்னும் 30 வருடத்தில் தமிழுக்கு சங்கு என்று அண்ணன் முகமூடியே தன் பதிவிலே சொல்லிட்டார்.

சங்கே முழங்கு என்ற தமிழுக்கே சங்கா ?
வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும் !!

தனித்தமிழில் எழுதுவது என்ன அவ்வளவு கடினமா ?

சரி இதோ என் தனித் தமிழ் பதிவு !

த மி ழ்



தனியா தமிழ் என்று எழுதுவது தானே தனித்தமிழ் பதிவு..

இதுக்குப் போயா உண்ணாவிரதம் மாதிரி ஒரு வாரம் தமிழில் எழுதறேன், அப்புறம் கன்னடத்தில் எழுதறேன் என்று கலாட்டா !

Tuesday, September 20, 2005

மொத்தமாய் ஜொள்ளு

எல்லாரும் ஜொள்ளு படங்கள் போடும் போது நாமும் போடாவிட்டால் எப்படி. அப்புறம் ஊர்ரோடு ஒத்து வாழ் என்று எங்க பாட்டி சொன்ன சொல்லுக்கு என்ன மரியாதை.

எச்சரிக்கை:
இந்த படங்கள் கண்டிப்பாக வயதுக்கு வந்தவர்களுக்கு மட்டுமே. அலுவலகத்திலோ, வீட்டிலோ இந்த படங்களை பார்த்து நீங்கள் மாட்டிக் கொண்டால் நான் பொறுப்பு அல்லன்.


படங்களுக்கு நன்றி google.com









Monday, September 19, 2005

பின்னூட்டத்தின் நாயகியே !

ஒவ்வொரு பதிவுக்கும் குறைந்த பட்சம் ஒரு முப்பது , நாப்பது பின்னூட்டம் இல்லாவிட்டால் , அந்த பதிவை, ஒரு நல்ல பதிவு iஇல்லை பட்டியலில் சேர்க்க சில பேர்கள் தயாராயிட்டிருக்காங்கன்னு நம்பத் தகுந்த வட்டாரங்கள் சொல்லக் கேள்விப்பட்டேன் (சரி, சரி, ஒருத்தர் தான்.. அவர் பெயர் து லே ஆரம்பிச்சு சி லே முடியும்ங்கிற ஒரே க்ளு தான் கொடுக்க முடியும், நடுவில ஒரே எழுத்துதான் இருக்கும். அது வாக இருக்கலாம்).


சரி, எந்த மாதிரி பதிவு போட்ட நிறைய பின்னூட்டம் வரும் என்று இந்த கேள்வி பதிவு. இந்த கேள்விகளுக்கும் lateral thinking க்கும் எந்த சம்பதமும் கிடையாது. இது ரொம்ப பழசு கண்ணா பழசு என்று உங்களுக்கு தோன்றினால், மெயில் அனுப்புங்கள், நல்ல களி பார்சலில் அனுப்பி வைக்கிறேன்.


1. ஜெயில் களிக்கும் வீட்டில் செய்யும் களிக்கும் என்ன வித்தியாசம் ?

2. வராத படத்திற்கு விமர்சனம் எழுதுவது எப்படி ?

3.ஓணாணுக்கு ஓணத்தை பற்றி தெரிய்மா ?

4. பல் டாக்டருக்கு பல் வலி வந்தால் அவர் என்ன பண்ணுவார் ?

5. டார்டாய்ஸ் ஏத்தினா கொசு போகும், ஆனா டார்டாய்ஸ் போக என்ன ஏத்தனும் ?


---------------------------------------------------------------------------------
( அக்கா, மன்னிச்சுக்குங்க !!!! )

வான்கோழிகளும், வாத்துகளும்

கான மயிலாட கண்டு இருந்த வான்கோழி

தமிழ் வலைப்பூக்களில் வாரத்துக்கு குறைந்தது இரண்டு தடவையாவது யாராவது இதை பதிவாகவோ பின்னூட்டமாகவோ போடாமல் இருப்பதே இல்லை. பாவம் வான்கோழி என்ன குற்றம் செய்தது .

என்னவோ மயில் பிரபுதேவா மாதிரியும், வான்கோழி, ஸ்டெப் போடத்தெரியாத பாக்கியராஜ் மாதிரி யும் இந்த குற்றச்சாட்டு.

வான்கோழிக்கு நாமாவது மரியாதை கொடுப்போம் என்று,
வான்கோழி கற்றக் கவி
என்று வலைப்பூ தலைப்பு வைத்தால், அதை கூட சரியாகப் படிக்காமல் இங்கேயும் வந்து மயிலைப் பார்த்த வான்கோழி என்று ரசிகர்கள் பின்னூட்டம் இட்டு விட்டு போகிறார்கள்.

டெக்னாலஜி இவ்வளவு வளர்ந்து விட்டக் காலத்தில் இன்னும் எதற்கு வான்கோழியும் மயிலும் ? இரவி சாஸ்திரி கமெண்டரி மாதிரி எவ்வளவு நாளைக்குத்தான் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வது . கொஞ்சம் புதுசாய் போடக்கூடாதா?..

உதாரணதிற்கு



  • MGR கட்சி ஆரம்பித்ததை பார்த்த விசயகாந்த் போல
  • சச்சின் பேட்டிங் பார்த்த சவுரவ் கங்குலி போல
  • முகமூடி, குசும்பர் பதிவு பார்த்த சின்னவன் போல
  • வாத்து போஸ் கொடுத்ததை பார்த்த பன்னிக்குட்டி போல
  • சாரு கெட்ட வார்த்தை பார்த்த இலக்கியவாதிகள் போல

கொஞ்சம் மாடர்னா எழுத சில யோசனைகள்.

உங்களுக்கு பிடித்த வான்கோழி மயில் ஒப்பீடுகளை பின்னூட்டத்தில் போடுங்கள். இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

Friday, September 16, 2005

தப்பித்து ஓடுவது யார்?

தப்பித்து ஓடுவது யார் ?

வாத்து வாரத்திற்கு பிறகு இந்த வீட்டை விட்டு/ஜெயிலை விட்டு ஓடும்/தொரத்தப்படும் வாரம் தொடங்கலாம் என்று ...


இங்கு தப்பித்து ஓடுவது யார் ?

என்று சரியாக சொன்னால், துளசி அக்கா செய்த களி, பார்சலில் அனுப்பி வைக்கப்படும்.

( Shipping & Handling extra ! )




Thursday, September 15, 2005

போட்டி

சிறுகதை போட்டி, கவிதைப் போட்டி எல்லாம் நடந்து முடிந்தாகி விட்டது. மிச்சம் இருப்பது இந்த ஒரு போட்டித்தான். யாரும் ஆரம்பிப்பதற்கு முன் நான் அறிவித்து விடுகிறேன்.

இதுவரை வெறும் $50, $75 பரிசு மட்டுமே இந்த வலைப்பூ வில் அறிவிக்கப்பட்டன. ஆனால் இந்த போட்டியின் பரிசு தொகை இதில் வரும் பின்னூட்ட்ங்களின் அடிப்படையில் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். ( உடனே முக்காடு நண்பர் நான் ஏற்கனவே பின்னூட்ட பரிசு அறிவித்தேன் என்பார். கஸ்மால பொடி எனக்கு இன்னமும் மெயிலில் வரவில்லை 150 பின்னூட்டம் என்னது. )


சரி, போட்டி இதுதான். கீழே இருப்பவை இந்த ஒரு வாரத்தில் வந்த வாத்து புகைப்படங்கள் ( சுட்டது/சுடாது ).
எந்த வாத்து நன்றாக் இருக்கிறது . போடுங்கள் ஓட்டு. நடுவரின் தேர்வும் உங்களின் தேர்வும் ஒத்து போனால், வரும் பின்னூட்ங்ளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பரிசு..


1


2


3

4


5

6

7

8


9

10

11

12

13


14


15





வாத்து படங்கள் (அ) ஒன்னும் புரியலை

பாயா
கூப்பு
அச்சூ
மடிப்பு
ஜிகினா
சுய்யான்
ஜில்பான்ஸி
காகம்
இரவுக்கடன்
கொடுமுடி
மீன்களுக்கு பாதுகை

உங்களுக்கு ஏதாவது புரியுதா ? ஸ்ட்ராங்காய் காபி குடித்து விட்டும் படித்து பார்த்த எனக்கு ஒன்றும் புரியவில்லை.

எல்லாரும் வாத்து படம் போடறாங்க. நாம மட்டும் போடலைன்னா எப்படி.

(இந்த படங்கள் நான் எடுத்தவை. மற்ற சிலரை போல நெட்டில் சுட்டவை அல்ல )



Tuesday, September 13, 2005

ஒரு மாதத்தில் கற்றுக் கொண்டது.

  • இணையமும், கிண்டல் க்ளோனிங்க் பதிவுகளும் புதுப்புது விரோதிகளையும் , அளவிட முடியா திட்டையும் , வெறுப்பையும் பெற்றுத்தரும் வல்லமை கொண்டது. இணைய விரோதிகள் அனுப்பும் மெயிலில், பேரம் பேசி ஆட்டோக்காரனிடம் வாங்கும் கெட்ட வார்த்தைகள் போல வார்த்தைகள் இருப்பது சகஜமானது!

  • இணையத்தில், நான் பதினெட்டு வயது பெண், செக்க சிவந்த தேகம், டென்னிஸ் ஆடி வளர்ந்த உடம்பு, பெயர் சானியா என்று yahoo/MSN -ல் உங்களுடன் அரட்டை அடிப்பவர்கள் , 45 வயதான, தொப்பை விழுந்த, வழுக்கை ஆணாகவும் இருக்கக் கூடும்.

  • விடுமுறையும், பொண்டாட்டி பிள்ளைகள் தொந்தரவு இல்லாமல் தனியாக ஊர் சுற்றுதலும் மிக அவசியம். Vacation என்பது , இந்தியா சென்று வருவதற்கு மட்டுமே உபயோகப்படும் ஏற்பாடு அல்ல. வீட்டுக்குள்ளேயே சுற்றவும், கற்கவும் பல விஷயங்கள் உள்ளது!

  • அமெரிக்கா கோயிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது, கேண்டீனில் மசால் வடை, புளிச்சாதம் வாசத்தை ஆச்சர்யத்தோடு சந்திப்பீர்கள். ஆத்திகனாக இருப்பதின் சௌகர்யங்களில் மேற்கூறியதுமொன்று!

  • Mac Donald's , French Fries ஆறிப்போனால் சாப்பிட நன்றாயிருக்காது.

Friday, September 09, 2005

புரட்டாசி புரோகிராமர்

நம்ம புரட்சி தலைவர், புரட்சி தலைவி, புரட்சி கலைஞர்,புரட்சி புரோக்கிராமர் குழலி எல்லாரையும் பார்த்து நமக்கும் ஏன் எதுனா பட்டம் போடக்கூடாது அப்படினு நினைச்சேன், அட நம்ம படிச்சி வாங்கியது ஒரு பட்டம்னா ப்ளாக்ல நமக்கு குடுக்குற பட்டம் எக்கச்சக்கம், என்ன இருந்தாலும் நாமலே நமக்கு ஒரு பட்டம் கொடுத்துக்கிறதுல இருக்கிற சொகம் வேறெதுக்குமில்லை

சரி ஆனா பட்டத்துல மொத வார்த்தை புரட்டாசினு இருக்கனும்,
ஆமா நீ என்ன பெரிய புடுங்கி புரட்சி புரட்டாசி செஞ்சனு நம்ம குழலி கேட்கறாரு அதனால என்ன தனக்குத்தானே பட்டம் கொடுத்துகிட்டவங்க மட்டும் என்ன செஞ்சிட்டாங்க அப்படினு கேட்டேன், அது தெரியாம குழலியின் கம்ப்யூட்டர் ஜி இஞ்சி நூறாக சுக்கு நூறாக உடைந்துவிட்டது (இனி குழலிக்கு ஜாவா தொல்லை இருக்காது.).

நாளைக்கு குழலி மாதிரி யாரும் வந்து என்ன பெரிய புரட்டாசி புரோகிராமர்னு பட்டம் போட்டுகிட்டனு கேட்க கூடாதில்லையா அதான் என்ன தகுதியிருக்கு அப்படினு யோசித்தேன்

நாம் எல்லாம் Driver வேலை பண்ணற ஆளுங்க. ஏதோ லாரி டிரைவர், ரெயில் என்ஞின் டிரைவர் வேலையோ என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள்.
யூ நோ ஸி ?

எனக்கு நன்றாக பார்க்க தெரியும் , ஏன் அபத்தமாய் இப்படி கேள்வி கேட்கிறாய் என்கிறீர்களா ?

இது அந்த "See" இல்லைங்க இந்த "C". a,b க்கு அப்புறமா K &R கண்டுபிடிச்ச C"


அதுல Pointers என்று ஒரு பாடாவதி கான்செப்ட் இருக்கு.

Pointers to pointers of an array of pointers என்று எல்லாம் புத்திசாலி புரோக்கிராமர்ஸ் எழுதி தள்ளுவாங்க. அத debug பண்றதுக்குள்ள நுரை தள்ளி, தாவு தீர்ந்துவிடும்.

ஆனா நான் எழுதுற புரோகிராம் pointers தேவையில்லை, எப்படியுமே debug பண்ண முடியாது .நான் எழுதற ஒவ்வொரு புரோக்கிராமிலும் புரட்டாசி என்று தேவை இருக்கோ, இல்லையோ ஒரு variable வைத்து விடுவேன். இப்போ சொல்லுங்க நான் புரட்டாசி புரோகிராமர் தானே.


புரட்டாசி புரோகிராமர் என்பதை நான் காப்பிரைட் செய்துவைத்துள்ளதால் யாரும் இதை பயன்படுத்தக்கூடாது, மீறுபவர்கள் குழலியுடன் சண்டை போட விட்டுவிடுவேன்.


சொல்ல மறந்த முக்கிய செய்தி..

நான் பொறந்த்து ஒரு புரட்டாசி மாதத்தில்.

Wednesday, September 07, 2005

ஷேனன் எலிசபெத்தும் பேச்சுலரின் ஃபீலிங்கும்

Shannon Elizabeth க்கு இன்று பிறந்தநாள்.

ஒவ்வொரு ஆண்டும் என் தம்பிதான் கடைத்தெருவுக்குப் போய் ஷேனன் படம் எல்லாம் மாட்டி பூஜை எல்லாம் பண்ணுவான். இந்த ஆண்டு நானே அத்திருப்பணியைச் சிறப்பாகச் செய்துமுடிக்க பக்தகோடிகள் (நண்பர்கள் ) தீர்மானம் நிறைவேற்றி இருந்தார்கள்.

லாஸ் ஏஞ்லஸின் அருந்தலமாம் ஹாலிவுட் திருத்தலத்தில் இந்த ஆண்டு ஷேனன் கையொப்பம் இட்ட படத்தின் விலை $100 என் அப்பா வழித் தாத்தாவுக்கு போலி கையெழுத்து போடத்தெரியும் எனக்குத் தெரியாது, போட்டோ மட்டும் இருந்து என்ன பயன்.

சந்தனம், குங்குமம் வைத்து சாமந்திப்பூக்களை உதிர்த்து 'American Pie 1,2,3 நமஹ' என்று சொல்லி உதடுகள் அர்ச்சித்தாலும் உள்ளம் ஃபீல் பண்ணாமல் இல்லை,




ஷேனனுக்கு பின்னாடி பொறந்தவங்க எல்லாம் மொதல்ல கொஞ்சநாள் ஷேனனுக்கு பொறந்த நாள் கொண்டாடறாங்க. அப்புறம் கல்யாணம் பண்ணிக்கிறாங்க. 30 வர்ஷம் கழிச்சு பிள்ளைங்களுக்கும் கொண்டாடறாங்க. ஆனா ஷேனன் ! பாவம். Baywatch க்கு Pamela Anderson மாதிரி , ஷேனனுக்கு என் மாதிரி பக்தர்களே கதி! கொஞ்சமாவது குடும்ப விவகாரங்களைக் கவனிக்க விட வேண்டாம் ரசிகர்கள் ? இருந்தாலும் என்னே உன் கருணை!


'குதிரை ஒன்னு மட்டும் ஓடி ஜெய்க்கும் ரேசு இது' பழமொழியை நம்பிவிட்டாயா ?

அடுத்த ஆண்டும் இதேமாதிரி தனி ஆளாய் இருந்து பிறந்தநாள் கொண்டாட வாழ்த்தி வணங்குகிறோம். தயவு செய்து கல்யாணம் பண்ணிக்காதீங்க !!. bachelorette வே இருங்க !இதுவே இந்த அன்பு பக்தனின் வேண்டுகோள், பிராத்தனை , பூஜை எல்லாம்

Tuesday, September 06, 2005

தூங்கும் பதிவுகள்

முகமூடி, குழலி, NJ, , VM ,

எதையாச்சும் எழுதுங்கப்பா , பாருங்க நீங்க எழுதாதலால் இந்த பதிவும் தூங்கிட்டு இருக்கு.
உடனே எதயாச்சும் எழுதாவிட்டால், கூட்டமாய் விசயகாந்த் ஆரம்பிக்கிற கட்சிக்கு மாறிடுவோம் என்று ரசிகக் கண்மணிகள் வேற பயமுறுத்தறாங்க.

சரி, போட்ட பதிவுக்கு உருப்பபடியா எழுத நம்ம வாத்தியார் George Carlin பொன்மொழிகள் சில.


  • Some see the glass as half-empty, some see the glass as half-full. I see the glass as too big.

  • Most people are not particularly good at anything.

  • The straightest line between a short distance is two points.

  • Hard work is for people short on talent.

  • Santa is satan spelled inside out.