Monday, September 19, 2005

வான்கோழிகளும், வாத்துகளும்

கான மயிலாட கண்டு இருந்த வான்கோழி

தமிழ் வலைப்பூக்களில் வாரத்துக்கு குறைந்தது இரண்டு தடவையாவது யாராவது இதை பதிவாகவோ பின்னூட்டமாகவோ போடாமல் இருப்பதே இல்லை. பாவம் வான்கோழி என்ன குற்றம் செய்தது .

என்னவோ மயில் பிரபுதேவா மாதிரியும், வான்கோழி, ஸ்டெப் போடத்தெரியாத பாக்கியராஜ் மாதிரி யும் இந்த குற்றச்சாட்டு.

வான்கோழிக்கு நாமாவது மரியாதை கொடுப்போம் என்று,
வான்கோழி கற்றக் கவி
என்று வலைப்பூ தலைப்பு வைத்தால், அதை கூட சரியாகப் படிக்காமல் இங்கேயும் வந்து மயிலைப் பார்த்த வான்கோழி என்று ரசிகர்கள் பின்னூட்டம் இட்டு விட்டு போகிறார்கள்.

டெக்னாலஜி இவ்வளவு வளர்ந்து விட்டக் காலத்தில் இன்னும் எதற்கு வான்கோழியும் மயிலும் ? இரவி சாஸ்திரி கமெண்டரி மாதிரி எவ்வளவு நாளைக்குத்தான் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்வது . கொஞ்சம் புதுசாய் போடக்கூடாதா?..

உதாரணதிற்கு



  • MGR கட்சி ஆரம்பித்ததை பார்த்த விசயகாந்த் போல
  • சச்சின் பேட்டிங் பார்த்த சவுரவ் கங்குலி போல
  • முகமூடி, குசும்பர் பதிவு பார்த்த சின்னவன் போல
  • வாத்து போஸ் கொடுத்ததை பார்த்த பன்னிக்குட்டி போல
  • சாரு கெட்ட வார்த்தை பார்த்த இலக்கியவாதிகள் போல

கொஞ்சம் மாடர்னா எழுத சில யோசனைகள்.

உங்களுக்கு பிடித்த வான்கோழி மயில் ஒப்பீடுகளை பின்னூட்டத்தில் போடுங்கள். இந்த லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாம்.

6 comments:

said...

kusumbuku maru peyar chinnavana???

said...

VM கதை பார்த்த சின்னவன் போல
என்று கூட போடலாம் இல்லையா VM ?

said...

வாத்தை பார்த்த பன்னி ...
சூப்பர் தல சூப்பர்,

said...

யோவ் வீ.எம்மு.,

என்னைய ஏம்ப்பா வம்புக்கு இழுக்குகின்றீர்? :-)

சின்னவரை அவராகவே இருக்க விடுமையா :-)

said...

எப்படி, எப்படி?

//சின்னவரை அவராகவே இருக்க விடுமையா //

சின்னவரைச் சின்ன்ன்ன்ன்ன்னவனாவே?

ஓஓஓஓ புரிஞ்சிருச்சு:-)))

said...

துளசி அக்கா
என்ன புரிஞ்சது ? தயவு செய்து தனி மயிலிலாவது சொல்லி விடுங்க !

( உங்க வாத்து ID சீ சீ. மயில் ID என்ன ? )