Friday, September 23, 2005

சில நேரங்களில்

நேர்நேர் தேமா நிரைநேர் புளிமா
என் மர மண்டைக்கு இது புரியுமா
கத்துக் கொடுத்த வாத்தியாரின் பெண் சுட்டி
ஒரு வெள்ளைக்காரனை கல்யாணம் கட்டி
இப்ப கான்வெண்டில் படிக்குது அவளின் குட்டி


குசும்பன் குழலி வீஎம் முகமூடி
படிக்கிறேன் அனைத்தும் தினமும் வாய்மூடி
பெரியவங்க போடறாங்க படம் வாத்து
புரியாத பின்னூட்டங்கள் அதில் பாத்து
பாட்டு லிங்கை கிளிக்கினால் வெறும் காத்து



பவுர்ணமி பாண்டியன்

==================
வீரப்பனின் முதலாமாண்டு நினைவுக்கு இந்த கவிதைகள் அர்ப்பணம் !!!

8 comments:

said...

தமில் வால்க வலர்க

said...

பவுர்ணமி பாண்டியனே மயக்கமா? கலக்கமா? கவிதை கவிதை... பொங்குகின்றது.

said...

இதை குறும்பாடு போட்டிக்கு அனுப்பலாமே...

அதிலும் அந்த இரண்டாவது கவிதை ::

மண்ணில் தெரியும் மனத்துக்கண் போல் கறியில் அகப்பட்ட கிடாவாய் தவிக்கிறேன்னு

****

வீரப்பனை அனைவரும் மறந்த நேரத்திலே நீங்கள் நினைவு படுத்தியது உங்கள் தமிழ்ப்பற்றையேஎ காட்டுகிறது... வாழ்க வீரப்பர்

said...

குழலி
என்ன ஆளாயே காணோம் கொஞ்ச நாளாய் !

முகமூடி
போட்டியில் எல்லாம் பரிசு கிடைக்கும் என்கிறீர்களா ? ( நடுவர்கள் கையூட்டு ( தனித்தமிழ் ) வாங்குவார்களா ? )

பாருங்க தமிழ் தலைவர்கள் எல்லாம் மாவீரன் வீரப்பனாரை மறந்து விட்டார்கள். என்ன ஒரு காலத்தின் கோலம்.


பாண்டி

ஹி ஹி. ரொம்ப டாங்ஸ் பா !

said...

கவிதைன்னா இது கவிதை..
பேஷ் பேஷ் ரொம்ப நன்னா இருக்கு !

said...

nice குறும்பா!

said...

Thanks Rain !
Please come again every time !!

said...
This comment has been removed by a blog administrator.