தங்கச்சியை நாய் கடிச்சிச்சிப்பா !.வா அண்ணாத்தே, வந்து குந்து. இன்னிக்கு நடந்த கதய கேட்டுகினியா நீயி
காலங்காத்தால, அஞ்சு மணிக்க்கெல்லாம், நம்ம பய வண்டியை கட்டினிக்கு வியாபாரம் பாக்க கிளம்பிகினம்பா. மார்கழி மாசமா, ஒரே குளுரு. பனியா பொய்து. ராவுல கஞ்சா அடிக்க வசதியாக கீனும்னு நம்ம பேட்டை பசங்ஹ தெரு ட்யூப் லைட்ட எல்லாம் ஒடிச்சி போட்டுனு கிறானுகுகளே, கண்ணே தெரியலப்பா.
ராத்திரி பொண்டாடி மேல கைய போட்ட
"ஏய்யா பேமானி, உன்க்கு வேற வேலை எதுவும் கிடியாதா" னு
கண்ட மேனிக்கு திட்டிட்டாப்பா. நானும் அதே சோகத்தில வண்டியை உருட்டிகினு போனாம்பா.
மார்கழி மாசம் ஆச்சா, நம்ம பேட்டை நாயுங்களெல்லாம், மஜாவா சோடியாய் சுத்திகினுகிறதா நான் பாக்காமா, ஒரு சோடி மேல லைட்டா டேஷ் உட்டுகினிம்பா.சும்மா வள் வள்னு கத்தினு என்ன ஒரக் கண்ணால பாத்திகினு நாய்ங்க ஓடிப் போச்சுப்பா.நானும் சரி, உடு, நாய்க்களுக்கு நம்மல மாத்ரி வேற வேலை எதுவும் இல்லனு வியாபாரம் பார்க்க போனேம்பா
தங்கச்சியை நாய் கடிச்சிச்சிப்பா !.சும்ம சாயங்கலாம், நம்ம தமாசு தங்கவேலுவு, நம்ம இரவுடி கபாலியும் அண்ணாத்தே அண்ணாத்தே உனக்கு விச்யம் தெரியுமான்னு கூவிக்கினே பசாருக்கு நம்ம கடையாண்ட வந்தானுங்க.
"இன்னடா, பேமானிகங்களா இன்னாடா விசயம்னு" நானும் கேட்டுகினேம்பா
"அண்ணாத்தே, அண்ணாத்தே, நம்ம தங்கச்சிய நாய் கட்சிச்சிடுப்பா" னானுக்க
"அட பரதேசிங்களா, நம்ம தங்கச்சிதான் முழு ஸ¥ஸ் ஆச்சே, அதுபாட்டுக்கு எங்கனா கக்கூஸாண்டா, வாந்திதானாடா எப்ப பார்த்தாலும் எடுத்துனு இருக்கும் அத எப்பட்றா நாய் கடிச்சிது"
ன்னு நானும் கேட்டுகினேம்பா !
"அண்ணாத்தே, வயக்கம்போல வாந்தி எடுக்கசொல்லறப்பதான் நாய் கடிச்சிசு" ன்னானுங்கப்பா
தங்கச்சியை நாய் கடிச்சிச்சிப்பா !.அப்பால, நானும், கபாலி, தஙகவேலு எல்லாம் கையில குச்சி எடுத்துனினு அந்த நாய் அடிக்க கிளம்பினாம்பா.
எல்லா இடத்திலும் தேடி போய்., கடைசியா, குப்பத்தொட்டிகிட்ட கண்டுபிடிச்சம்பா.,
"அண்ணாத்தே அண்ணாத்தே , அந்த நாய்தான் நம்ம தங்கச்சிய கடிச்சிது " ன்னு பசங்க அடையாளம் காட்டினானுங்கப்பா.
அது எந்த நாய்டானு பார்த்தா, காலையிலே நான் வண்டியில டேஷ் உட்டேன் பாருப்பா, அதே நாய்தான்பா.மவனே என்னையாடா காலையில ஜல்சா பண்றசொல்ல இடிச்சே , இப்ப உன் தஙக்சசி கதிய பார்த்தியா ந்னு நக்கலா போஸ் குடுக்குதுப்பா.
சரின்னு நானும், கபாலியும் தங்கவேலும் நாலு அடிப்போட்டு தொர்த்திஉட்டேன்பா.வூட்டாண்டா வந்து பார்த்தா, தங்கச்சிக்கு வெறி புடிச்சி போச்சு, தொப்புள சுத்தி 48 ஊசி போட்டனும்னு டாக்கரு சொல்லிட்டாருப்பா.
என் தங்கச்சி கதைய பார்த்தியா நைனா. நான் என்னத்த பண்ணுவேன். இனிமே தண்ணியே அவ குடிக்ககூடாதாம்பா. அதான் நான் தண்ணிப் போட்டு பொலம்பினுகிறேன்.
தங்கச்சியை நாய் கடிச்சிச்சிப்பா !.