Monday, July 25, 2005

பூரி..

பூரி..
இதை பற்றி எழுத வேண்டாமென்று தான் நினைத்தேன்.என்க்கும் வேற
எழுத கிடைக்காத்தினால்...


ஆனாலும் என்ன பண்றது. இதை பற்றி நான் எழுதா விட்டால் பலருக்கு இங்கே வருத்தமாக இருக்கும். (படித்த பிறகும் வருத்தம் அதிகமாக தான் இருக்கும் என்பது வேறு விஷயம்!)



ஞாயிற்றுக்கிழமையானால் போதும் குளிக்கிறமோ இல்லையோ பக்கத்து தெரு நாயர் கடை பூரி மசாலவை விழுங்காம விடுவதில்லை , அப்புறம் தமிழில் 1001 இடத்தில் இருக்கும் இந்த வலைபூவில் அதை பற்றி எழுதாமல் விடுவதில்லை என்று குறைகூறும் குயிலி, கொத்தமல்லி அக்கா போன்றோரின் நம்பிக்கையை இந்த வாரம் பூரி செய்ய சீ சீ பூர்த்தி செய்ய முடியவில்லை .


சொல்லாம கொல்லாம நம்ப நாயர் ஊரை பார்க்க போய்விட்டதால் நான் அக்கவுண்டில் சாப்பிட்டு வரும் காசு உடனே கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து தப்பித்து இருக்கிறேன்.


ஆகவே பெட்டர் லக் நெக்ஸ்ட் வீக்..!


(தலைப்பை பார்த்துட்டு என்னவோ ஏதோன்னு விழுந்தடிச்சு ஓடி வந்த ஞான குடம், வாய்மூடிக்கு நன்றி!)



வழக்கம் போல, சம்பத்த பட்டவங்க, இதில் உள்ள "குசும்பை" மட்டும் எடுத்துகிட்டு என்னை கோர்ட், கேஸ் என்று இழுத்தடிக்க வேண்டாம்.. :)))

16 comments:

Anonymous said...

இந்த மாதிரி நேரத்தை வீணாக்குவதை விட ஒழுங்க அங்க அங்க போஸ்டராவது அடிக்கலாம்

Anonymous said...

இதே மாதிரி வாய் மூடி சப்பாத்தி பத்தி எழுதன ஏன் யாரும் கண்டிக்க வில்லை..

உதித் நாராயணா !!! உதித் நாராயணா !!!

Anonymous said...

யோவ் ஞான குட இந்த ம் வேற கீபோர்டுல காணாம போயிடுதும், ஆன இப்ப எப்படி சரியா டைப் அடிச்சன்னு கேட்க கூடாது..

நான் எழுதனது சப்பாத்தி கள்ளி பத்தியா. பேசாம நீர், மசால படங்களை பெரிசா போடும்.. பூரிக்கு தொட்டு கொள்ளவது மாதிரியாவது இருக்கும்.

Anonymous said...

What a funny world !!!

I have not seen such a nonsense feedback so far in blogs.

While you eat free Pooris from Nair store , what is wrong writing about it.

One more information Pori sir, I also eat free pooris there.

There are thousands good and bad things eating at Nair kadai . If you maximize only problems, you are not going to gain free Pooris from him. I am sorry.

குழலி / Kuzhali said...

எனக்கு பூரி என்றாலே எங்கள் கல்லூரி விடுதியில் போடப்பட்ட பூரிதான் நினைவுக்கு வரும், என்ன அந்த பூரியை திட்டிக்கொண்டே 10,12 என்று சாப்பிடுவோம்

சின்னவன் said...

வாங்க குழலி.

உங்க பேரிலும் இப்படி ஒரு பின்னூட்டம் போடனும் இருந்தேன்.. அதுக்குள்ள நீங்களே வந்துடீங்க.


இதுதான் குயிலின் பின்னூட்டம்..


ஆரம்பிச்சுட்டாங்கயா, ஆரம்பிச்சுட்டாங்க..
எதுக்கும் சின்னவனுக்கு நன்றி ்ன்னு போட்டு , நாமும்
இட்லி, தோசை, மசால்வடைன்னு ஒரு மூணு நாலு பதிவு போட்டு தாக்க வேண்டியது தான் ;)

Anonymous said...

எலியை பார்த்து சூடு போட்டு கொண்ட எருமை !

Anonymous said...

என்னவோ நடக்குது..
சின்னவா, யாருப்பா நீ?
எங்கயோ கேட்ட குரல் மாதிரி இருக்கே !!!

நற்கீரன் said...

:-)

சின்னவன் said...

நன்றி நற்கீரர் அவர்களே,
நட்சத்திர எழுத்தாளர் என் பதிவில் பின்னூட்டம் இடுவதில் மிக்க மகிழ்ச்சி.

துளசி கோபால் said...

//நான் அக்கவுண்டில் சாப்பிட்டு வரும் காசு உடனே கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து தப்பித்து இருக்கிறேன்.//

கடனுக்குச் சாப்புடறப்பவே இப்படி! கையிலே காசு கொடுத்துச் சாப்புட்டுட்டாலும்.......

கொத்தமல்லி அக்கா

சின்னவன் said...

கையில் காசு கொடுத்து சாப்பிட்டு இருந்தால் நம்ம வலைபூ ஏன் 1001 இடத்திலா இருக்கும், அது இருக்கும் இடமே வேற.

சாப்பாட்டை பற்றி எழுதும் போது, கொத்தமல்லிதான் சரியாக வந்தது., துளசின்னா நான் ஏதோ வேற பேசறேன்னு
நினைக்க போறங்கனுதான்... ஹி ஹி...

Anonymous said...

இதையும் படித்து பாருங்கள்

சின்னவன் said...

நமக்கு வர ஆளுங்களே குறைவு,
இதயும் திசை திருப்பிட்டா நான் என்ன பண்றது ?

Anonymous said...


இது என்ன அவரை ஓட்டும் வாரமா?

எல்லாரும் இந்த தாக்கு தாக்கறீங்க ?

என்ன கோபம் சாரே ?

சின்னவன் said...

ஐயோடா கோபம் ஒன்னும் இல்லா !!!

வரிசையா ஒவ்வொருத்தராதானே ஓட்டனும்.

அடுத்தது நீங்க தான் மகேஷ்வரன் !!!