Tuesday, December 04, 2007

கொத்தனாரின் கொலைவெறி

கொத்ஸின் நூறாவது பதிவாம், பட்டி மன்றமாம் !

வெயிலடித்துக் கொண்டே
மழை பொழிவது போல்
தெண்டுல்கர் 99 இல் அவுட் ஆகி
இந்தியா ஜெயிப்பதுப் போல்
இன்பம் துன்பம் இரண்டும்
இழையோடும் தருணம் இது.

தமிழை இணையத்தில் முன்னெடுத்துச்
செல்ல வேண்டிய
கொத்ஸ் பல நேரங்களில்
நகராமலும், நகரமுடியாமலும்
சில நேரங்களில் பின்னோக்கியும் செல்வது ஏன் ?

சரியான கேள்வி,
சாட்சிகள் கிடைக்காத வேள்வி !!

கோமாவில் கிடப்பவனுக்கு
தேதி எதுக்கு ?
உனக்கும் மட்டும் ஏன் இந்த கேள்வி ?

என் சுயநலத்தில் பொது நலமும் சார்ந்து இருக்கிறது !


யுத்தங்களும் , சத்தங்களும்,
ரத்தங்களுக்கும் மத்தியில்
என் நெடுங்கனவு நீண்டு கொண்டே இருக்கிறது!!

என்ன கனவு அது ?
எப்பொருள் பற்றியது ?


பின்னூடமே வராத கொத்ஸின்
பதிவு எப்போது வரும் ?

பூமியோடு நான் மட்டும்
சுற்றிக் கொண்டே இருக்கிறேன்.
என் நிறைவேறாத
கனவை நெஞ்சில் சுமந்துக் கொண்டே !!!


பெளர்ணமி பாண்டியன்.